2012-10-19 15:47:23

உலகின் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படுவதற்கு ஐ.நா.அழைப்பு


அக்.19,2012. பல அரிய உயிரினங்கள் வாழும் தேசியப் பூங்காக்கள், மற்றும் பிற பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பாதி, பாதுகாக்கப்படாத நிலையில் உள்ளன என்று ஐ.நா.அறிக்கை ஒன்று கூறுகிறது.
உலகின் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஏறக்குறைய 15 விழுக்காட்டு கார்பனைக் கொண்டிருக்கின்றன மற்றும் இவை நூறு கோடிக்கு மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருக்கின்றன என்று, இந்த அறிக்கையை வெளியிட்ட ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் இயக்குனர் Achim Steiner தெரிவித்தார்.
பல்வேறு உயிரினங்கள் குறித்த ஐ.நா. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் இந்தியாவின் ஹைதராபாத்தில் நடத்திவரும் கூட்டத்தில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
உலகில் ஏறக்குறைய 1.6 விழுக்காட்டுப் பெருங்கடல் பகுதியே பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பதாகக் கூறும் அவ்வறிக்கை, உலகின் குறைந்தது 17 விழுக்காட்டு நிலப்பகுதியும், 10 விழுக்காட்டுக் கடல் பகுதியும் 2020ம் ஆண்டுக்குள் சமமாக நிர்வாகிக்கப்பட வேண்டுமென்று ஐ.நா. திட்டமிட்டுள்ளது என்றும் கூறுகிறது.
இந்த இலக்கை எட்டுவதற்கு, மேலும் 80 இலட்சம் சதுர கிலோ மீட்டர் கடல் மற்றும் கடற்கரைப் பகுதி, பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டுமென்றும் கூறுகிறது அவ்வறிக்கை.







All the contents on this site are copyrighted ©.