பசுவின் பால் அருந்தினால் எய்ட்ஸ் நோயைத் தடுக்கலாம்
அக்.18,2012. பசுவின் பால் அருந்தினால் எச்.ஐ.வி., எய்ட்ஸ் நோயைத் தடுக்கலாம் என ஆஸ்திரேலிய
அறிவியலாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழக அறிவியலாளரான
மாரிட் கிராம்ஸ்கி (Marit Kramski) இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார். அவர் சோதனையின்படி,
கருவுற்றிருந்த பசு ஒன்றில், எச்.ஐ.வி., புரோட்டீன்களை உட்செலுத்தி, அந்த பசு கன்று ஈன்ற
பின் தந்த சீம்பாலை (colostrum) சோதனை செய்து பார்த்தில், எச்.ஐ.வி.,யைத் தடுக்கக்கூடிய
ஏராளமான எதிர் உயிரிகள் (antibodies) இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார். இந்த முறை எந்த
அளவு சாத்தியம் என்பது குறித்து அறிவியலாளர்கள் தற்போது ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். இம்முறை
சாத்தியப்படும் பட்சத்தில் இவ்வகை பால், பதப்படுத்தப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும் என
எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதையச் சூழலில், ஆணுறைகளை அடுத்து, மிகவும் எளிமையாக
எச்.ஐ.வி.,யை தடுக்கும் வழியாக இது அமையும் என கிராம்ஸ்கி தெரிவித்துள்ளார். இம்முறை
செயல்பாட்டிற்கு வர இன்னும் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது ஆகும் என்று கூறப்படுகிறது.