அக்.18,2012. அன்பு நேயர்களே, இம்மாதம் 11ம் தேதி வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில்
13வது உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர், அதன் பிரதிநிதிகள், உலக ஆயர் பேரவைகளின் தலைவர்கள்,
1962ம் ஆண்டில் தொடங்கி மூன்றாண்டுகள் நடைபெற்ற இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில்
கலந்து கொண்டு இன்றும் வாழ்ந்து கொண்டிருப்போரில் 15 பேர் என 400 பேருடன் கூட்டுத்திருப்பலி
நிகழ்த்தி நம்பிக்கை ஆண்டைத் தொடங்கி வைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். 2013ம் ஆண்டு
நவம்பர் 24ம் தேதி கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று நிறைவடையும் இவ்வாண்டு குறித்து அருள்பணி
முனைவர் ஜெரோசின் அவர்களிடம் கேட்டோம். தூத்துக்குடி மறைமாவட்டத்தைச் சேர்ந்த இவர் தற்சமயம்
இத்தாலியில் மறைப்பணியாற்றி வருகிறார்.