நம்பிக்கை ஆண்டையொட்டி ஜப்பான் கத்தோலிக்க ஆயர்கள் வெளியிட்டுள்ள செய்தி
அக்.18,2012. Fukushimaவில் நிகழ்ந்த நிலநடுக்கமும், சுனாமியும் மனிதகுலத்தின் மீதும்,
தனி மனிதர்கள் மீதும் இன்னும் ஆழமான நம்பிக்கை வைப்பதற்கு நல்லதொரு தருணமாக அமைந்தது
என்று ஜப்பான் கத்தோலிக்க ஆயர்கள் அவை கூறியுள்ளது. இம்மாதம் 11ம் தேதி ஆரம்பமான நம்பிக்கை
ஆண்டையொட்டி செய்தி வெளியிட்டுள்ள ஜப்பான் ஆயர்கள் பேரவை, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11ம்
தேதி ஜப்பானில் நிகழ்ந்த இயற்கைப் பேரழிவுகளின்போது தனி மனிதர்களும், குழுக்களும் செய்த
உதவிகள் மனிதகுலத்தின் மீது நம்பிக்கையை வளர்த்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்டியது. ஜப்பானிய
சமுதாயம் சந்தித்துவரும் பல்வேறு சவால்களை இச்செய்தியில் குறிப்பிடும் ஆயர்கள், அறிவியல்
சாதனைகளைக் கடந்து, இறைவனை நம்பி வாழ்வதற்கு இவ்வாண்டு நமக்குச் சிறப்பான அழைப்பை விடுக்கிறது
என்று கூறியுள்ளனர். குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்து
நம்பிக்கைக் கதவின் வழி ஒருங்கிணைந்த பயணம் செய்யவேண்டும் என்று ஆயர்களின் செய்தி அழைப்பு
விடுத்துள்ளது.