2012-10-18 15:34:44

ஆயர்கள் மாமன்றத்திற்கு சீனாவின் 90 வயது ஆயர் Lucas Li Jingfeng அனுப்பியுள்ள செய்தி


அக்.18,2012. சீனாவில் நிலவும் அரசியல் சூழல் நிரந்தரமற்றது, ஆனால், மக்களிடம் காணப்படும் நம்பிக்கை ஆழமானது, நிரந்தரமானது என்று சீனாவின் 90 வயது ஆயர் Lucas Li Jingfeng கூறினார்.
உரோமையில் இம்மாதம் துவங்கியுள்ள ஆயர்கள் மாமன்றத்தில் கலந்து கொள்ள இயலாமல் சீன அரசால் தடுக்கப்பட்டுள்ள ஆயர்கள் சார்பில் மாமன்றத்திற்கு ஆயர் Li அனுப்பியுள்ள ஒரு செய்தியில் அவர் இவ்விதம் கூறியுள்ளார்.
ஆயர் Li அனுப்பிய செய்தியினை மாமன்றத்தின் பொது அமர்வில் இச்செவ்வாயன்று மாமன்றச் செயலர் பேராயர் Nikola Eterovic வாசித்தார்.
ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் கிறிஸ்தவ மதத்தின் மீது தற்போது நிலவி வரும் ஆர்வமற்ற போக்கிற்கு ஒரு மாற்றாக, சீனத் திருஅவையில் மக்களிடையே நிலவும் நம்பிக்கை ஒரு பாடமாக அமைந்துள்ளது என்று ஆயர் Li தன் செய்தியில் சுட்டிக் காட்டியுள்ளார்.
சீன அரசுக்கும் கத்தோலிக்கத் திருஅவைக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாய் கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதால் 1998, 2005, 2008 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு ஆயர்கள் மாமன்றங்களுக்கு சீன ஆயர்கள் அழைக்கப்பட்ட போதிலும், அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.








All the contents on this site are copyrighted ©.