2012-10-17 15:50:51

நம்பிக்கைக் கதவுகள் நமக்கு எப்போதும் திறந்தே உள்ளன - பாங்காக் கர்தினால் Kitbunchu


அக்.17,2012. இறைவனுடன் ஒன்றித்து வாழும் வகையில், நம்பிக்கைக் கதவுகள் நமக்கு எப்போதும் திறந்தே உள்ளன என்று பாங்காக் முன்னாள் பேராயர் கர்தினால் Michael Mechai Kitbunchu கூறினார்.
தாய்லாந்து நாட்டின் அருளாளர் Nicholas Boonkerd Kitbamrung அவர்களின் திருத்தலத்தில் நம்பிக்கை ஆண்டைத் துவக்கிவைக்கும் திருப்பலியை நிகழ்த்தி, மறையுரையாற்றிய முன்னாள் பேராயர் கர்தினால் Kitbunchu, அருளாளர் Kitbamrung நம்பிக்கை நிறைந்த வாழ்வின் எடுத்துகாட்டாக இருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
நம்பிக்கை ஆண்டினைத் துவக்கும் வகையில் அருளாளர் Kitbamrung திருத்தலக் கோவிலின் முகப்பு வாயிலைத் திறந்துவைத்த கர்தினால் Kitbunchu, பாங்காக் உயர்மறைமாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்களுக்கு நம்பிக்கை ஆண்டின் அடையாளம் பதித்த கொடிகளை வழங்கினார்.
அக்டோபர் மாதம் செபமாலை அன்னையின் மாதமாக இருப்பதால், தாய்லாந்து திருஅவைக்கும், நாட்டுக்கும் செபங்களை எழுப்பும் நேரம் இது என்று கர்தினால் Kitbunchu எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.