அக்.16,2012. இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்படும் 34வது உலக உணவு தினத்தை முன்னிட்டு
இலங்கையில் ஒருவாரக் கருத்தரங்குகளும் சமய நடவடிக்கைகளும், குறுநாடகங்களும் இடம்பெற்று
வருகின்றன. உலக உணவுப் பாதுகாப்புக் குறியீட்டில் 105 நாடுகளில் இலங்கை 62 வது இடத்தில்
உள்ளதையொட்டி, அந்நாட்டில் உணவுப் பாதுகாப்பு, உணவுப்பொருள்களைக் கொண்டிருப்பதற்கான உரிமை,
மீன்பிடித் தொழில்கள் போன்றவை குறித்து கருத்தரங்குகள் இடம்பெற்று வருகின்றன. மேலும்,
இவ்வுலக உணவு தினத்தைச் சிறப்பித்த இந்தியாவின் ஆந்திர மாநிலப் பெண்கள், பாரம்பரிய விவசாய
முறைகளை ஊக்குவிப்பது குறித்து எடுத்துக் கூறினர். இதன்மூலம், இந்தியாவின் ஊட்டச்சத்துக்
குறைபாட்டை அகற்ற முடியும் எனவும் அப்பெண்கள் கூறினர். உலகில் சுமார் 87 கோடிப்பேர்
பசியால் வாடுகின்றனர்.