அக்.15,2012. நொபெல் பொருளாதார விருது அமெரிக்கர்களான ஆல்வின் ஈரோத், லாய்டு எஸ்.ஷேப்லே
ஆகிய இருவருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில்
சாதனைப் படைத்தவர்களுக்கு நொபெல் விருது வழங்கப்பட்டுவரும் நிலையில், ஏற்கனவே அறிவியல்,
வேதியல், இலக்கியம், அமைதிப்பணி உள்ளிட்ட துறைகளுக்கான நொபெல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய
புதிய பொருளாதாரக் கொள்கைகள் மூலம் நலஆதரவு மற்றும் கல்வியில் நல்தாக்கங்களைக் கொண்டுவந்ததற்காக
89 வயது லாய்டு எஸ்.ஷேப்லே, 60 வயது ஆல்வின் ஈ.ரோத் ஆகிய இருவருக்கும் பொருளாதாரத்திற்கான
நொபெல் விருது வழங்கப்படுவதாக இவ்விருது அமைப்பு அறிவித்துள்ளது.