2012-10-15 16:47:52

ஆயர்கள் மாமன்றத்தில் தவாவோ பேராயர் : பிலிப்பீன்சில் அடிப்படைக் கிறிஸ்தவக் குழுக்களின் வளர்ச்சி


அக்.15,2012. இச்சனிக்கிழமை மாலை இடம்பெற்ற 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் 10வது பொது அமர்வில் 222 மாமன்றத் தந்தையர் கலந்து கொண்டனர்.
Kinshasa பேராயர் கர்தினால் Laurent MONSENGWO PASINYA தலைமையில் நடைபெற்ற இப்பொது அமர்வில் பிலிப்பீன்சின் Davao பேராயர் Romulo G. VALLES உட்பட 15 மாமன்றத் தந்தையர் உரையாற்றினர்.
இம்மான்றத்திற்கெனத் தயாரிக்கப்பட்டத் தொகுப்பில் பங்குகளில் அடிப்படைக் கிறிஸ்தவக் குழுக்கள் உருவாக்கப்படுவதன் நேர்த்தியான அனுபவம் மற்றும் அவைகளின் வளர்ச்சி குறித்துச் சொல்லப்பட்டிருந்தது என்று கூறிய Davao பேராயர் Romulo, பிலிப்பீன்சின் Mindanao மாநிலத்தில் இந்தக் கிறிஸ்தவக் குழுக்களின் வளர்ச்சியை அதிகம் காண முடிகின்றது என்றுரைத்தார்.
இந்த அடிப்படைக் கிறிஸ்தவக் குழுக்களின் உதவியுடன் புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்றும் கூறினார் பேராயர் ரோமுலோ.







All the contents on this site are copyrighted ©.