"நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்க இலங்கை அரசு முற்பட வேண்டும்”, சர்வேதேச நீதித்துறை
அக். 11, 2012. இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ண ஆயுததாரிகளால்
தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உறுதியான நடவடிக்கைகளை எடுத்து இலங்கை அரசு நீதியை நிலை
நாட்ட வேண்டும் என்று சர்வேதேச நீதித்துறை வல்லுனர்கள் அமைப்பு கூறியுள்ளது. மஞ்சுளா
திலகரட்ண மீதான தாக்குதல் நீதித்துறையின் சுதந்திரத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளின் ஓர்
அங்கமாகும் என்றுரைத்த அனைத்துலக நீதித்துறை வல்லுனர்கள் அமைப்பின் ஆசிய இயக்குனர் சாம்
ஜாப்ரி, நாட்டில் உள்ள நீதிபதிகள் பாதுகாப்பாகவும், அச்சுறுத்தலுக்கு ஆளாகாமலும் பணியாற்றக்கூடிய
ஒரு சூழலை அரசு உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்குச்
சுதந்திரமான ஒரு நீதி அமைப்புத் தேவை என்று கூறியுள்ள ஜாப்ரி, அரசு ஊடகம் மூலமாக நீதிபதிகளுக்கு
மிரட்டல் விடுப்பது நீதித்துறையின் சுதந்திரத்தையும் பாரபட்சமற்ற தன்மையையும் பாதிக்கும்
என்றும் கூறியுள்ளார்.