இறுதிக் கட்ட போரின் போது புலி உறுப்பினர்கள் சரணடைய விரும்பினர்: விக்கிலீக்ஸ்
அக். 11, 2012. இறுதிக்கட்டப் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள்
சரணடைய விரும்பியதாக முன்னாள் நார்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். 2009
மே மாதம் 17, 18ம் தேதி வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களுடன் தொடர்புகளைக்
கொண்டிருந்தபோது, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அல்லது வேறு சர்வதேச நிறுவனமொன்றின் ஊடாக
இறுதி நேரத்தில் சரணடைய புலிகள் விரும்பியது தெரியவந்த்தாகக் கூறினார் அமைச்சர். இறுதி
நேரத்தில் சர்வதேச சமூகமோ அல்லது புலம்பெயர்த் தமிழர்களோ தலையீடு செய்து தங்களைக் காப்பாற்றுவார்கள்
என மரபு ரீதியில் போரை முன்னெடுத்து வந்த புலிகள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என எரிக்
சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் நிறுவனம் தன் அறிக்கையில் கூறியுள்ளது.