சிரியாவில் அமைதி ஏற்பட ஒப்புரவினால் மட்டுமே இயலும் : முதுபெரும் தலைவர் லஹாம்
அக்.10,2012. சிரியாவில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மோதல்கள் முடிவுக்கு வரவேண்டுமானால்
ஒப்புரவு ஒன்றினால் மட்டுமே இயலக்கூடியது என்று மெல்கித்தே கிரேக்கரீதி கத்தோலிக்க முதுபெரும்
தலைவர் 3ம் Grégoire Laham ஃபிதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார். சிரியாவில் தொடர்ந்து
சண்டை இடம்பெறுகிறது, குழப்பம் மேலோங்கி இருக்கிறது, இந்தப் பிரச்சனைகளுக்குரிய சரியான
தீர்வுகள் அரசிடமோ, எதிர்தரப்பிடமோ அல்லது பன்னாட்டுச் சமுதாயத்திடமோ யாரிடமும் கிடையாது
என்றும் முதுபெரும் தலைவர் லஹாம் கூறினார். திருஅவை சிரியா அரசுக்கு எதிராகவோ சார்பாகவோ
இல்லை, ஆனால் திருஅவை அன்புக்குச் சாட்சியாக இருக்கவும் சிரியாவைக் காப்பாற்றவும் விரும்புகிறது
எனவும் அவர் கூறினார்.