ஆயர்கள் மாமன்றத்தில் பிலிப்பீன்ஸ் பேராயர்:நற்செய்தியை அறிவிப்பவர் ஏழைகளின் ஏழ்மையைப்
பகிர்ந்து கொள்ள வேண்டும்
அக்.10,2012. நற்செய்தியை அறிவிப்பவர் ஏழைகளின் ஏழ்மையைப் பகிர்ந்து கொள்ளும்வரை ஏழைகளுக்கு
நற்செய்தி அறிவிப்பது இயலக்கூடியதே என்று இச்செவ்வாய் பொது அமர்வில் கூறினார் பிலிப்பீன்ஸ்
Lingayen-Dagupan பேராயர் Socrates Villegas. நற்செய்தி அறிவிப்பவர்க்குத் தாழ்மையும்
ஒருமைப்பாட்டுணர்வும் அவசியம் என்றுரைத்த பேராயர் Villegas, காலியான வயிறுகளுக்கு நற்செய்தியைப்
போதிக்க முடியும், ஆயினும் போதகரின் வயிறும் தனது பங்கு மக்களின் வயிறுகளைப் போன்று காலியாக
இருக்க வேண்டும் என்று கூறினார். இன்னும், இச்செவ்வாய் பொது அமர்வில் உரையாற்றிய நியுயார்க்
கர்தினால் திமோத்தி டோலன், புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியின் முதல் திருவருள்சாதனம்
ஒப்புரவு திருவருள்சாதனம் என்று கூறினார்.