அக்.09,201. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் தங்களின் உழைப்புக்கு ஊதியம் தரப்படவில்லை
என்று கூறி ஏறக்குறைய 15 ஆயிரம் பழங்குடி மக்கள் Barwaniல் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
மத்திய அரசின் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் தாங்கள் செய்த வேலைக்கு ஊதியம்
தரப்படவில்லை என்ற இம்மக்களின் புகார்களை ஐ.நா.வுக்கு எடுத்துச் செல்லவிருப்பதாக சமூக
ஆர்வலர்கள் கூறியுள்ளனர். இந்தப் புகாரை இம்மாதம் 15ம் தேதி ஐ.நா.வில் சமர்ப்பிப்பதற்குத்
திட்டமிட்டுள்ளனர் சமூக ஆர்வலர்கள். மத்திய பிரதேச மாநிலத்தின் 50 மாவட்டங்களில் ஒன்றான
Barwaniல் 15 ஆயிரம் மக்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லையெனக் கூறப்படுகிறது.