Home Archivio
2012-10-08 16:22:48
கவிதைக் கனவுகள் – அம்மா (கவிஞர் ரெக்சி&சுபி)
வலி நிறைந்த வாழ்வில்
போராட்டமே முடிவாச்சு
கண் துடைக்க கைகள் இல்லை
ஆறுதல் சொல்ல ஆளில்லை,
உடலும் சோர்கிறது
உணர்வுகள் மரிக்கின்றன
முழுவதுமாய் முடிவதற்குள்
தலை சாய்க்க
அம்மா உன் மடி தேடுகிறேன்
விரைந்து வருவாயா?
All the contents on this site are copyrighted ©.