அக்.06,2012. பங்களாதேஷில் பழங்குடிச் சமூகங்களைச் சேர்ந்த கிறிஸ்தவச் சிறார் கடத்தப்பட்டு
"madrassas" எனப்படும் முஸ்லீம் பள்ளிகளில் விற்கப்பட்டு மதமாற்றம் செய்யப்படுகிறார்கள்
அல்லது மனித வியாபாரிகளிடம் அடிமைகளாக விற்கப்படுகிறார்கள் என்று சிட்டகாங் ஆயர் மோசஸ்
கோஸ்தா கூறினார். குடும்பங்கள், தங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக மறைந்து வாழ்கின்றனர்
என்று ஃபிதெஸ் செய்தி நிறுவனத்திடம் உரைத்த ஆயர் கோஸ்தா, இந்தப் பழங்குடிச் சமூகங்களின்
சட்டரீதியான உரிமைகளும் சுதந்திரமும் பாதுகாக்கப்படுவதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்குமாறு
அழைப்பு விடுத்தார். மேலும், சிட்டகாங் மலைப்பகுதிகளில் திரிபுரா பழங்குடிச் சிறார்
இத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது பொதுவான ஒரு செயலாக இருப்பதாகவும், அண்மை மாதங்களில்
madrassas பள்ளிகளிலிருந்து ஏறத்தாழ 105 கிறிஸ்தவச் சிறார் மீட்கப்பட்டுள்ளனர் எனவும்
ஒரு கத்தோலிக்க ஆர்வலர் தெரிவித்தார்.