2012-10-06 15:46:00

இந்தியாவில் கல்வித் தரத்தை மேம்படுத்த உலக வங்கி நிதியுதவி


அக்.06,2012. இந்தியாவில் உயர்நிலைப் பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக ஏறக்குறைய 50 கோடி டாலர் அளவிற்கு கடன் உதவி அளி்க்க உள்ளது உலக வங்கி.
இந்தியாவில் உயர்கல்வி திட்டத்தை மேம்படுத்தும் வகையில் Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA) என்ற திட்டத்திற்கு ஏறக்குறைய 50 கோடி டாலர் அளவிற்கு கடன் உதவி வழங்கப்படவுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் புதுடில்லியில் இவ்வெள்ளி்க்கிழமை கையெழுத்தானது.
நிதியமைச்சகத்தின் இணைச் செயலாளர் பிரமோத் சக்சேனா மற்றும் உலக வங்கிக்கான இந்திய இயக்குனர் Onno Ruhl ஆகியோரிடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
உலக வங்கி மூலம் பெறப்படும் இந்நிதியுதவி கல்வித்துறை வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் என நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.