அருள்தந்தை லொம்பார்தி : உலக ஆயர்கள் மாமன்றமும் உற்றுக்கேட்டலும்
அக்.06,2012. உலக ஆயர்கள் மாமன்றம், நம் ஆண்டவரின் தூய ஆவிக்குச் செவிமடுத்து, திருஅவை
சரியான பாதையில் முன்னோக்கிச் செல்வதற்கானப் வழிகளைப் பரிந்துரைத்து அவ்வழியில் ஒன்றுசேர்ந்து
பயணிக்கச் செய்கிறது என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி
கூறினார். உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்து கொள்பவர்கள் தங்களது கருத்துக்களைச் சொல்வதற்கு
மட்டுமல்லாமல், மற்றவர் பேசுவதைக் கேட்பதற்காகவும் வந்துள்ளார்கள் என்றும் அருள்தந்தை
லொம்பார்தி கூறினார். மற்றவர் பேசுவதைத் தாழ்மையுடன் உற்றுக் கேடபவர் தூய ஆவியின்
பள்ளியில் பங்கு பெறுகிறார் என்றுரைத்த அருள்தந்தை லொம்பார்தி, இரண்டாம் வத்திக்கான்
பொதுச்சங்கத்தின்போது இது வியத்தகு முறையில் இடம்பெற்றது என்று கூறினார்.