ஷங்கய் மறைமாவட்டத்தில் குருக்களும் துறவிகளும் மறுகல்வி பயிற்சிக்குச் செல்லுமாறு அரசு
வலியுறுத்தல்
அக்.05,2012. சீனாவின் ஷங்கய் மறைமாவட்டத்தில் கத்தோலிக்கரை ஒடுக்கும் அரசின் முயற்சியின்
ஒரு கட்டமாக அம்மறைமாவட்டத்தின் எல்லாக் குருக்களும் துறவிகளும் மறுகல்விப் பயிற்சிக்குச்
செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன. சீன அரசு ஆதரவு பெற்ற
கத்தோலிக்கத் திருஅவையிலிருந்து விலகுவதாக கடந்த ஜூலையில் ஷங்கய் துணை ஆயர் Thaddeus
Ma Daqin பொதுப்படையாக அறிவித்ததைத் தொடர்ந்து சீன அரசு இந்நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மத
விவகாரங்களில் அரசின் அணுகுமுறை, கம்யூனிசக் கோட்பாடுகள் ஆகியவைகளைக் கொண்ட தொடர் வகுப்புகளில்
குருக்களும் அருள்சகோதரிகளும் சேருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்த வகுப்புகளை
அரசு அதிகாரிகளே எடுக்கின்றனர் என்று ஊடகச் செய்தி கூறுகின்றது