2012-10-05 15:41:18

மொசாம்பிக்கில் சனநாயகத்தை வலுப்படுத்துமாறு ஆயர்கள் வலியுறுத்தல்


அக்.05,2012. ஆப்ரிக்க நாடான மொசாம்பிக்கில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு இருபது ஆண்டுகள் ஆகியிருக்கும் இவ்வேளையில் அந்நாட்டின் சனநாயகத்தை வலுப்படுத்துவது மிகவும் இன்றியமையாதது என்று அந்நாட்டு ஆயர்கள் கூறினர்.
மொசாம்பிக்கில் ஏறக்குறைய இருபது ஆண்டுகள் இடம்பெற்ற உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டுவந்த அமைதி ஒப்பந்தம் உரோமையில் கையெழுத்திடப்பட்டதன் இருபதாம் ஆண்டை இவ்வியாழனன்று நினைவுகூர்ந்த ஆயர்கள் உறுதியான சனநாயகத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
சனநாயகத்தைக் காப்பதற்காகச் செயல்படுகிறோம் என்றுரைக்கும் அரசியல் கட்சிகள் நடைமுறையில் உள்ளும் புறமும் சர்வாதிகாரப்போக்கைக் கொண்டுள்ளன என்றும் குறைகூறிய மொசாம்பிக் ஆயர்கள், நாடு பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல், ஆன்மீகத்திலும் மாற்றம் அடையுமாறு கேட்டுக் கொண்டனர்.







All the contents on this site are copyrighted ©.