2012-10-05 15:40:01

அனைத்துலக காரித்தாஸ் தலைவர் : ஏழ்மை அமைதிக்கு மிகப்பெரும் எதிரி


அக்.05,2012. வறுமை அமைதிக்கு மிகப்பெரும் எதிரி என்றும், தோழமையுணர்வே ஏழ்மைப் பிரச்சனையை அகற்றுவதற்கான வழி என்றும் அனைத்துலக காரித்தாஸ் தலைவரான ஹொண்டுராஸ் கர்தினால் ஆஸ்கார் ஆந்ரெஸ் ரொட்ரிகெஸ் மாராதியாகா கூறினார்.
இஸ்பெயின் தலைநகர் மத்ரித்தில் "Mensajeros de la Paz" அதாவது அமைதியின் தூதர்கள் என்ற அமைப்பின் 50வது ஆண்டு விழாவில் இச்செவ்வாயன்று உரையாற்றிய கர்தினால் மாராதியாகா, பசிதாகத்தினாலும், தடுப்பூசிகள் போடப்படாததாலும் கல்வியறிவு இல்லாததாலும் உலகின் பல பகுதிகளில் எண்ணற்ற மக்கள் இறப்பது குறித்து கடுமையாய்ச் சாடினார்.
நாம் குகைகளில் வாழும் கற்காலத்துக்குச் சென்றுகொண்டிருப்பது போல் தோன்றுகிறது என்றுரைத்த கர்தினால், இலட்சக்கணக்கான மக்கள் தங்களது எதிர்கால வாழ்க்கை குறித்து கனவு காணவோ திட்டமிடவோ முடியாத நிலையில் உள்ளனர் என்றும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.