அக்.04, 2012. எருசலேமின் சியோன் மலையிலுள்ள புனித ஃபிரான்சிஸ் துறவு இல்ல வாசலில் இயேசு
கிறிஸ்துவை அவதூறாகப்பேசும் வார்த்தைகளை எழுதிச் சென்றுள்ளனர் அடையாளம் தெரியாத மனிதர்கள்
சிலர். இயேசுவின் இறுதி இரவு உணவு இடம்பெற்ற பகுதிக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள பிரான்சிஸ்கன்
துறவு சபை இல்லத்தின் வாசலில் கடந்த மாதமும் சிலர் இத்தகைய வார்த்தைகளை எழுதிச் சென்றதாக
உரைத்த அப்பகுதி கிறிஸ்தவத் தலைவர்கள், பிரான்சிஸ்கன் துறவுச் சபையினருடன் தங்கள் ஒருமைப்பாட்டையும்
அவர்களுக்கான செப உறுதியையும் வெளியிட்டுள்ளனர். இதற்கிடையே, கிறிஸ்தவர்களுக்கு எதிரான
இத்தகைய விஷமச்செயல் குறித்து தன் கண்டனத்தை வெளிட்யிட்ட இஸ்ராயேல் அரசுத்தலைவர் Shimon
Peres, இத்தகையச் செயல்கள் யூத மதத்தின் மதிப்பீடுகளுக்கும் ஒழுக்க வாழ்வுக்கும் எதிராகச்
செல்வதாகத் தெரிவித்தார்.