2012-10-04 16:52:12

இங்கிலாந்தில் உலக குழந்தைகளுக்கென சிறப்புச் செபம்


அக்.04, 2012. உலகின் குழந்தைகளுக்கு நற்செய்தியை எடுத்துச் செல்வது என்ற நோக்குடன் இங்கிலாந்தில் இடம்பெற்ற தேசிய செபம் மற்றும் வழிபாட்டு நாளில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
Wembley விளையாட்டரங்கில் கூடிய பல்வேறு கிறிஸ்தவ சபைகள் மற்றும் அமைப்புகளின் அங்கத்தினர்கள், உலகில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் நற்செய்தியை எடுத்துச்செல்வதில் தங்கள் அர்ப்பணத்தை வெளியிட்டதோடு, உலகக் குழந்தைகள் அனைவருக்காகவும் ஒன்றிணைந்து செபிக்கவும் செய்தனர்.
கடந்த 22 ஆண்டுகளாக இங்கிலாந்தின் தேசிய செபம் மற்றும் வழிபாட்டு நாளில் உலகக் குழந்தைகளுக்காகச் சிறப்பாகச் செபிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் அங்குள்ள கிறிஸ்தவர்கள்.








All the contents on this site are copyrighted ©.