புவி வெப்பமடைவதால் மீன்வளம் குறையும்: அறிவியலாளர்கள்
அக்.02,2012. புவி வெப்பமடைந்து வருவதன் காரணமாக உலகப் பெருங்கடல்களில் மீன்வளம் ஏறக்குறைய
24 விழுக்காடு குறைந்துவிடும் எனத் தெரிவதாக அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். கடல்
நீர் வெப்பமடைவதால் 2001ம் ஆண்டு தொடங்கி 2050ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அறுநூறுக்கும்
அதிகமான மீன் இனங்களில் எவ்விதமான பாதிப்புகள் ஏற்படும் என்பதை கணினிகள் துணைகொண்டு ஆய்வாளர்கள்
கணித்துள்ளனர். நீரின் வெப்பம் அதிகரிக்கும்போது அதிலுள்ள பிராணவாயுவின் அளவு குறைந்துவிடுவதால்
மீன்களின் உடல் எடையும் கணிசமான அளவில் குறைந்துபோய்விடுகிறது என அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். வெப்ப
வாயுக்களின் வெளியேற்றத்தால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஏற்கனவே
கணிக்கப்பட்டதைவிட மிகவும் அதிகம் என்றும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர். கடலில் வெப்பம்
அதிகரிக்க அதிகரிக்க ஆண்டுக்கு 36 கிலோமீட்டர்கள் என்ற அளவில் மீன்கள் துருவப் பகுதிகளை
நோக்கி தங்களது வாழ்விடங்களை மாற்றிக்கொண்டே இருக்கும் என்று தற்போதைய ஆய்வுகள் காட்டுகின்றன.