இலங்கையில் உடனடியாக அரசியல் தீர்வை முன்வைக்க பான் கி மூன் வலியுறுத்தல்
அக்.02,2012. இலங்கையில் தாமதமின்றி உடனடியாக அரசியல் தீர்வு ஒன்று காணப்பட வேண்டும்
என்று ஐ.நா. பொது செயலர் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின்
தலைமையகத்தில் இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்தபோது அவர்
இவ்வாறு வலியுறுத்தினார். போருக்குப் பின்னர் இலங்கை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும்
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகள்
குறித்து அவ்வமைச்சர், பான் கீ மூனிடம் விளக்கியுள்ளார். அதேநேரம், இலங்கை அரசு, சிறுபான்மை
மக்களுக்கான அரசியல் தீர்வினை மேலும் தாமதிக்காமல் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று
ஐ.நா.பொதுச் செயலர் வலியுறுத்தினார்