2012-10-02 15:01:51

இந்தியாவில் மிகப்பெரிய இயேசு கிறிஸ்துவின் திருவுருவம்


அக்.02,2012. இந்தியாவில் மிகப்பெரிய இயேசு கிறிஸ்துவின் திருவுருவம் கேரளாவின் திருவனந்தபுரத்தில் திறக்கப்பட்டுள்ளது.
33.5 அடி உயரமுடைய இயேசுவின் திருவுருவத்தை சீரோ மலங்கரா ரீதித் தலைமைப் பேராயர் Mar Baselios Cleemis Catholicos திறந்து வைத்தார்.
பிரேமச்சந்திரன் என்ற சிற்பியால் செய்யப்பட்ட இத்திருவுருவத்தை நிலைநிறுத்த ஏறத்தாழ 30 பணியாளர்கள் 35 நாள்கள் வேலை செய்தனர்.
இந்த உருவத்தை அமைப்பதற்கு 15 இலட்சம் ரூபாய்ச் செலவானதாகச் சொல்லப்பட்டுள்ளது.
29 அடி உயரம் கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருவுருவம் ஏற்கனவே பெங்களூரில் உள்ளது.







All the contents on this site are copyrighted ©.