அனைத்து ஆயுதங்களையும் அழிப்பதற்கான நேரம் வந்துள்ளது : பான் கி மூன்
அக்.02,2012. உலகில் வேதிய ஆயுதங்கள் உட்பட அனைத்து ஆயுதங்களையும் ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கான
நேரம் வந்துள்ளது என்று ஐ.நா.பொது செயலர் பான் கி மூன் கூறியுள்ளார். உலகில் சேமித்து
வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்ட வேதிய ஆயுதங்களில் நான்கில் மூன்று பாகம் அழிக்கப்பட்டுவிட்டதாகவும்,
இவைகளை அழிப்பது குறித்த உடன்பாட்டில் 188 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன எனவும் இத்திங்களன்று
நிருபர்களிடம் கூறினார் பான் கி மூன். எனினும், சிரியா உட்பட எட்டு நாடுகள் இன்னும்
அந்த உடன்பாட்டில் இணையவில்லை என்றும் அவர் தெரிவித்தார். வேதிய ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம்
ஏற்படுத்தப்பட்டதன் 15ம் ஆண்டு இவ்வாண்டில் இடம்பெறுவதால், 21ம் நூற்றாண்டில் வேதிய ஆயுதங்களுக்கு
இடமே இல்லை என்று சொல்லி அவை அனைத்தும் அழிக்கப்படுமாறு கேட்டுக் கொண்டார் ஐ.நா.பொது
செயலர்.