2012-10-01 16:06:32

நைரோபியில் கிறிஸ்தவச் சிறார்கள் மீது தாக்குதல்


அக்.01,2012. கென்ய தலைநகரில் ஞாயிறு மறைக்கல்வி வகுப்பில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது, மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
நைரோபியின் புனித போலிகார்ப் கோவிலில் இச்சனிக்கிழமையன்று தாக்குதல் நடத்தியவர்கள், சொமாலி நாட்டைச் சேர்ந்த இசுலாமிய தீவிரவாதக் குழு எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கிடையே, இந்த வெடிகுண்டு தாக்குதலால் கோபமுற்ற ஒரு குழு, கோவிலுக்கு அருகே வாழும் சொமாலிய மக்களைத் தாக்கியதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.