உலகை மாற்ற விரும்புவோர் முதலில் தங்களுக்குள் மாற்றத்தைக் காணவேண்டும்
அக்.01,2012. ஒவ்வோர் இளைஞரும் நல்ல பலன் தரும் தலைவராகச் செயல்பட்டு, தேசத்தைக் கட்டி
எழுப்புவதில் உதவ வேண்டும் என அழைப்பு விடுத்தார் இந்தியாவின் பெல்லாரி ஆயர் ஹென்றி டி
சூசா. கர்நாடக இளையோர்க்கென நடத்தப்பட்ட மூன்று நாள் கருத்தரங்கின் துவக்க விழாவில்
உரையாற்றிய ஆயர், உலகை மாற்ற விரும்புவோர் முதலில் தங்களுக்குள் மாற்றத்தைக் காண வேண்டும்
என்றார். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து ஒவ்வொருவரும் உணர்ந்திருக்க
வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் ஆயர் டி சூசா. இதே கருத்தரங்கில் உரையாற்றிய திருப்பீட
மறைப்பணிக் கழகத்தின் தேசிய இயக்குனர் அருள்பணி Faustine Lobo, இன்றைய இளையோர் தங்கள்
வேலைப்பளுவின் காரணமாக ஆன்மீக நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை இழந்து வருவது குறித்து
கவலையை வெளியிட்டார். Belthangadyயில் இடம்பெற்ற இந்த மூன்று நாள் கருத்தரங்கில் இரண்டாயிரத்திற்கும்
மேற்பட்ட இளையோர் கலந்து கொண்டனர்.