2012-09-29 15:29:33

காஸ்தெல் கந்தோல்ஃபோ பணியாளர்களுக்குத் திருத்தந்தை நன்றி


செப்.29,2012. இந்த உலகில் எல்லாமே கடந்து போகின்றது, அவை இதமான மற்றும் அமைதியான நேரமாகக் கடந்து போகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
காஸ்தெல் கந்தோல்ஃபோவில் கோடைவிடுமுறையை முடித்து வத்திக்கான் திரும்புவதற்கு முன்னர், அங்கு தனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை, அவர்கள் அனைவரையும் இறைவன் தமது நன்மைத்தனத்தாலும் ஆசீராலும் நிறைத்து, தமது அன்பில் வைத்துக் காப்பாராக என்று கூறினார்.
நம் ஆண்டவர் இயேசுவுக்கும் மீட்பின் திருவார்த்தைக்கும் நம் இதயங்களையும் வாழ்வையும் அகலத் திறப்பதற்கு உதவும்வகையில் விசுவாச ஆண்டைத் தொடங்கி வைக்கும் நாளை ஆவலோடு எதிர்நோக்கியிருப்பதாகவும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வருகிற அக்டோபர் 11ம் தேதி தொடங்கும் விசுவாச ஆண்டு, 2013ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதியன்று நிறைவடையும்.
காஸ்தெல் கந்தோல்ஃபோவில் கோடைவிடுமுறை இல்லத்திலிருந்து இத்திங்களன்று வத்திக்கான் திரும்புகிறார் திருத்தந்தை.
மேலும், அருளாளர் திருத்தந்தை 23ம் அருளப்பர் லொரேத்தோ அன்னைமரியா திருத்தலத்துக்கு திருப்பயணம் மேற்கொண்டதன் 50ம் ஆண்டு நினைவாக, திருத்தந்தை 16ம் பெனடிக்டும் வருகிற அக்டோபர் 4ம் தேதி லொரேத்தோவுக்கு ஒருநாள் திருப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.