2012-09-29 15:18:29

கவிதைக் கனவுகள் - முட்டுக்கல் எட்டிப்பறக்கும்


கவிதை அந்தாதி என்ற இணையத்தளத்தில் விகடகவி படைத்த கவிதை

முயலாமை... உன்னை
சோம்பேறி ஆக்கும்..
எழுந்து முட்டிப்பார்..
முட்டுக்கல் எட்டிப்பறக்கும்..
அறியாமை எல்லாம்
உற்சாகம் விலக்கும்..
உடல் வருத்தியுதவினால்
சந்தோசம் கிடைக்கும்..

வெற்றிக்கு வழி வீட்டில் கிடப்பதல்ல
சிந்தை விரித்து சிறகை யடித்து
விண்ணில் பறப்பது...
எழுந்திரு மனிதா..
பிறரைக் காயம் பண்ணாமல்..
உன் காயத்துக்கான உணவை
நீ உழைத்தெடு.. நீ
புத்துணர்வு பெறுவாய்..







All the contents on this site are copyrighted ©.