2012-09-29 15:37:38

2013ம் ஆண்டின் உலகச் சமூகத்தொடர்பு நாளுக்கானத் தலைப்பு


செப்.29,2012. 2013ம் ஆண்டு மே 12ம் தேதி சிறப்பிக்கப்படவிருக்கும் 47வது உலகச் சமூகத்தொடர்பு நாளுக்கெனத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு இச்சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டது.
“சமூக வலைத்தளங்கள் : உண்மை மற்றும் விசுவாசத்தின் நுழைவாயில்கள்; நற்செய்தி அறிவிப்புக்கு புதிய தடங்கள்” என்பது 47வது உலகச் சமூகத்தொடர்பு நாளுக்கெனத் திருத்தந்தை தேர்ந்தெடுத்துள்ள தலைப்பாகும்.
இக்காலத்தில் வேகமாக வளர்ந்து வரும் வலைத்தளங்கள், நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு மிக முக்கியமான சவால்களில் ஒன்றாக இருக்கின்றது எனவும், விசுவாச ஆண்டுச் சூழலில் இந்தத் தலைப்புக்குத் திருத்தந்தை மிகுந்த கவனம் செலுத்தியுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகச் சமூகத்தொடர்பு நாள், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் அழைப்பின்பேரில் உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் ஒரே தினமாகும்.







All the contents on this site are copyrighted ©.