2012-09-27 15:51:00

சமூகத் தொடர்புத்துறையில் ஏற்பட்டுள்ள புரட்சி, புரிந்துகொள்ளுதலில் ஒன்றிணைந்து வருவதற்கான நல்லதொரு வாய்ப்பு


செப்.27,2012. இக்காலத்தில் சமூகத் தொடர்புத்துறையில் ஏற்பட்டுள்ள புரட்சி, புரிந்துகொள்ளுதலில் ஒன்றிணைந்து வருவதற்கான நல்லதொரு வாய்ப்பை நவீன மக்களுக்கு வழங்கியுள்ளது என ஐ.நா. அவைக்கூட்டத்தில் அறிவித்தார் கர்தினால் Edward Egan.
ஐ.நா. பொது அவையின் 67வது கூட்டத்தொடரின் துவக்க விழாவில் செப உரையாற்றிய கர்தினால், நாடுகளிடையே அமைதியையும் பேச்சுவார்த்தைகளையும் ஊக்குவிக்க சமூகத்தொடர்புச் சாதனங்களின் முழுப்பயன்பாட்டையும் நாம் கைக்கொள்ள வேண்டும் என்றார்.
எக்காலமும் காணாத அளவுக்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், அவைகளைப் பயன்படுத்தி உலகில் அமைதியைக் கொணர உழைப்பது ஒவ்வொருவரின் கடமை எனவும் கேட்டுக்கொண்டார் கர்தினால் Egan.








All the contents on this site are copyrighted ©.