2012-09-26 16:47:06

போதைப்பொருள் வியாபாரமும் பயங்கரவாதச் செயல்களும் அதிகரிப்பதற்கு பெரு பேராயர் கண்டனம்


செப்.26,2012. இலத்தீன் அமெரிக்கா முழுவதும் அதிகரித்துவரும் போதைப்பொருள் வியாபாரமும் பயங்கரவாதச் செயல்களும் ஒழிக்கப்படுவதற்கு மக்கள் செபிக்குமாறு கேட்டுள்ளார் பெரு நாட்டு Piura பேராயர் Jose Antonio Eguren.
இரக்கமுள்ள அன்னைமரியின் பெயரால் திருப்பலி நிகழ்த்திய பேராயர் Eguren, 1992ம் ஆண்டில் பெரு நாட்டு பயங்கரவாதக் குழுத் தலைவர் Abimael Guzman கைது செய்யப்பட்ட பின்னர் சிறிது குறைந்திருந்த பயங்கரவாதச் செயல்கள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளன என்று கூறினார்.
அண்மையில் பெரு நாட்டின் தென் பகுதியில் பல படைவீரர்களும் காவல்துறையினரும் போதைப்பொருள் வியாபாரிகளால் கொல்லப்பட்டதையும் மறையுரையில் குறிப்பிட்ட பேராயர், பயங்கரவாதம், மனிதமற்றது, நற்செய்திக்குப் புறம்பானது மற்றும் மனித மாண்புக்கும் சமூக அமைதிக்கும் புறம்பானது என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.