செப்.26,2012. சமூகத்தில், காதுகேளாதோர் சந்திக்கும் பிரச்சனைகளையும், அவர்களது கோரிக்கைகளையும்
கருத்தில்கொண்டு அவர்களுக்கான வசதிகளை உருவாக்க, ஒவ்வோர் அரசும் பரிசீலிக்க வேண்டும்
என்பதை வலியுறுத்தி ஆண்டுதோறும் செப்டம்பர் இறுதி வாரம் காதுகேளாதோர் வாரம் எனக் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வாண்டு
இவ்வாரம் இத்திங்கள் முதல் வருகிற ஞாயிறுவரைக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதிக சப்தத்தை
கேட்பதால்கூட காது கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. உலக மக்கள் தொகையில் 5 விழுக்காட்டினர்
இந்த வகையில் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக மனிதரது காது 20 ஹெர்ட்ஸில் இருந்து 20
கிலோ ஹெர்ட்ஸ்வரை கேட்கும் திறன் பெற்றது.