2012-09-25 15:58:53

யாழ்ப்பாணத்தில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு


செப்.25,2012. இலங்கையின் யாழ்ப்பாணத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், ஆண்டுதோறும் ஏறக்குறைய ஐயாயிரம் புற்றுநோயாளிகள் பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் புற்றுநோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்கும் நோக்கில் தெல்லிப்பளை மருத்துவமனைக்கு அருகில் 26 கோடி ரூபாய்ச் செலவில் புற்றுநோய் மருத்துவமனையொன்று அமைக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணப் புற்றுநோயாளிகள் தற்போது மஹரகம புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், இலங்கையில் ஆண்டுதோறும் இருபதாயிரம் பேர் புற்றுநோயினால் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.