2012-09-25 15:44:05

தேர்தலில் விசுவாசத்தின் அடிப்படையில் வாக்களிக்குமாறு லாஸ் ஆஞ்சலீஸ் பேராயர் வலியுறுத்தல்


செப்.25,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டில் வருகிற நவம்பரில் இடம்பெறவிருக்கும் தேர்தலில், கத்தோலிக்கர் தங்களது விசுவாசத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்த வாழ்வை அடையும் எண்ணத்தில் வாக்களிக்குமாறு வலியுறுத்தியுள்ளார் லாஸ் ஆஞ்சலீஸ் பேராயர் Jose Gomez .
குடிமக்கள் என்ற முறையில் தேர்தலில் பங்கெடுப்பதற்கு முக்கியமான கடமை உள்ளது, இதனை எப்பொழுதும் கடவுளுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையின் ஒளியில் நிறைவேற்ற வேண்டுமெனவும் பேராயர் Gomez, The Tidings என்ற இதழில் எழுதியுள்ளார்.
நாம் எப்பொழுதும் கிறிஸ்து மற்றும் திருஅவையின் மனநிலையோடு இணந்து சிந்தித்துச் செயல்பட வேண்டும் எனவும் பேராயர் கூறியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.