எழுத்து.காம் என்ற இணையதளத்தில் குடும்பம் என்ற தலைப்பில் வெளியான கவிஞர் கண்ணதாசன் அவர்களின்
கவிதையிலிருந்து ஒரு பகுதி
சகடத்தில் ஏறிவிட்டால் தாழ்ந்தும் உயர்ந்தும் வரும்
இருட்டு வெளிச்சமென இரண்டு வைத்தான் பேரிறைவன். இன்ப துன்பங்களுக்கு இதுதான்
நியதி என்றான்! கோடை வெயிலடித்துக் கொளுத்துகின்ற வேளையிலே அம்மா மழைஎன் றலறுகிறோம்,
மழைவந்து வெள்ளம் பெருக்கெடுத்து வீதியையே மூழ்கடித்தால் வெய்யிலையே தேடி விடிகதிரை
வணங்குகிறோம்! கூடும் குறையும் குறைந்ததெல்லாம் வளமாகும் எப்போது எது நடக்கும்
இறைவனுக்குத் தான் தெரியும்.