நைஜீரியாவில் கத்தோலிக்கப் பேராலயம் தாக்கப்பட்டது, 5 பேர் பலி
செப்.24, 2012. நைஜீரியாவின் Bauchi எனுமிடத்திலுள்ள புனித யோவான் கத்தோலிக்கப் பேராலயத்தில்
நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் இறந்துள்ளனர் மற்றும் 48 பேர் காயமடைந்துள்ளனர். இஞ்ஞாயிறு
காலை திருப்பலி முடிந்து விசுவாசிகள் திரும்பிக் கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத்
தாக்குதலில் அவ்விடத்திலேயே இரு கிறிஸ்தவர்களும், தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்தியவரும்
உயிரிழந்தனர். காயமடைந்த ஏறத்தாழ 50 பேரில் பின்னர் மருத்துவமனையில் ஒரு தாயும் குழந்தையும்
உயிரிழந்தனர். இத்தாக்குதல் குறித்து நைஜீரியாவின் பல்வேறு மனித உரிமை அமைப்புகள்
தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.