2012-09-21 15:32:03

நேபாள அரசியலின் தற்போதைய உட்பூசல்கள் நிறுத்தப்பட சமயத் தலைவர்கள் வலியுறுத்தல்


செப்.21,2012. நேபாள அரசியல் கட்சிகள் மற்றும் அரசுத் தலைவர்கள் மத்தியில் அதிகரித்துவரும் ஒற்றுமையின்மை அகற்றப்படுமாறு அந்நாட்டுச் சமயத் தலைவர்கள் இவ்வெள்ளிக்கிழமையன்று வலியுறுத்தினர்.
செப்டம்பர் 21ம் தேதியான இவ்வெள்ளிக்கிழமையன்று 30வது அனைத்துலக அமைதி தினத்தை காட்மண்டிலுள்ள புத்தமடத்தின் கோவிலில் கடைப்பிடித்த நேபாளத்திலுள்ள மதங்களின் பிரதிநிதிகள், நேபாள அரசியலின் தற்போதைய உட்பூசல்கள் நிறுத்தப்படுமாறு வலியுறுத்தினர்.
செப்டம்பர் 21ம் தேதியான இவ்வெள்ளியன்று 30வது அனைத்துலக அமைதி தினம் உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது.
மேலும், உலகெங்கும் இடம்பெறும் போர் நடவடிக்கைகள் முழுமையாய் நிறுத்தப்படுமாறு இவ்வெள்ளியன்று கேட்டுக் கொண்டார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.
உலகில் அமைதிகாக்கும் பணிகளின்போது இறந்தவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இவ்வெள்ளிக்கிழமை நண்பகல் வேளையில் ஒரு நிமிடம் மௌனம் காக்குமாறும் பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.
ஆயுதம் தாங்கிய மோதல்கள் உலகின் நிலையான வளர்ச்சியின் தூண்களைத் தாக்குகின்றன என்றும், இயற்கை வளங்கள் போர்களுக்காக அல்லாமல் சமுதாயத்தின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்








All the contents on this site are copyrighted ©.