இஸ்பெயினில் கருக்கலைப்புகள் முற்றிலும் நிறுத்தப்படுவதற்கு வாழ்வுக்கு ஆதரவான நிறுவனம்
முயற்சி
செப்.21,2012. வருகிற அக்டோபரில் கடைப்பிடிக்கப்படும் வாழ்வுக்கு ஆதரவான மூன்றாவது அனைத்துலக
நாளின்போது இஸ்பெயினில் கருக்கலைப்புகள் முற்றிலும் நிறுத்தப்படுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படும்
என்று அந்நாட்டின் வாழ்வுக்கு ஆதரவான நிறுவனம் அறிவித்தது. இஸ்பெயின் தலைநகர் மத்ரித்திலும்
அந்நாட்டின் 63 நகரங்களிலும், இன்னும் உலகின் ஏறத்தாழ 30 நாடுகளிலும் வருகிற அக்டோபர்
7ம் தேதியன்று வாழ்வுக்கு ஆதரவான மூன்றாவது அனைத்துலக நடைப்பயணம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருக்கலைப்புகள் முற்றிலும் நிறுத்தப்படுவதற்கு இவ்வுலகத் தினத்தன்று முயற்சிகள்
எடுக்கப்படும் என்றும் இதனை நடத்துவோர் அறிவித்தனர்.