செப்.20,2012. யூதர்களின் 5773ம் புத்தாண்டு தொடங்கியுள்ளதையொட்டி உலகின் யூதர்களுக்கு
அமைதியும் நல்வாழ்வும் நிறைந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம்
பெனடிக்ட். யூதர்களின் 5773ம் புத்தாண்டுப் பெருவிழா, அதைத் தொடர்ந்து இடம்பெறும்
பாவக்கழுவாய் நிறைவேற்றும் நாள், கூடாரப் பெருவிழா ஆகிய யூதர்களின் புனித நாள்களையொட்டி
உரோம் எபிரேயச் சமுதாயத் தலைவர் யூதமதக் குரு ரிக்கார்தோ தி செஞிக்கு நல்வாழ்த்துக்கள்
நிறைந்த தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை. உலகில் யூதர்களும் கிறிஸ்தவர்களும்
நட்பிலும் ஒருவர் ஒருவரை மதிப்பதிலும் வளர்ந்து, ஒரே கடவுளை வணங்குவதிலிருந்து மலரும்
விழுமியங்களுக்கு உலகில் சாட்சிகளாக வாழ வேண்டுமென்ற தனது ஆவலையும் அச்செய்தியில் தெரிவித்துள்ளார்
திருத்தந்தை. Tishrei மாதத்தின் முதல் நாள் எபிரேயர்களின் புத்தாண்டு சிறப்பிக்கப்படுகிறது.
Tishrei மாதத்தின் 15வது நாளில் கூடாரப் பெருவிழாவும், அதைத்தொடர்ந்து பாவக்கழுவாய் நிறைவேற்றும்
நாளும் சிறப்பிக்கப்படுகின்றன. கூடாரப் பெருவிழா நாளில் யூதர்கள் எருசலேம் ஆலயத்துக்குத்
திருப்பயணம் மேற்கொள்கின்றனர்.