2012-09-20 16:44:40

சிரியாவில் ஆயுத மோதல்கள் குறித்து திருப்பீடத்தூதர் கவலை


செப்.20, 2012. சிரியாவில் பதட்டநிலைகள் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கைகள் தற்போது கோபமாகவும் ஏமாற்றமாகவும் மக்களிடையே பெருகிவருவதாக கவலையை வெளியிட்டார் அந்நாட்டிற்கானத் திருப்பீடத்தூதுவர் பேராயர் Mario Zenari.
சிரியாவின் கத்தோலிக்க உயர்மறைமாவட்டமான Homsன் அலுவலகம் தாக்கப்பட்டத்தைத் தொடர்ந்து தற்போது சில கிறிஸ்தவர்கள் ஆயுதங்களைக் கைக்கொண்டுள்ளது குறித்தும் தன் கவலையை வெளியிட்டார் பேராயர்.
கிறிஸ்தவர்கள் எக்காரணம் கொண்டும் ஆயுதங்களைக் கைக்கொள்ளக்கூடாது என சிரியா ஆயர்கள் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.