2012-09-18 14:58:37

திருத்தந்தை : உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர் பெயர்கள்


செப்.18,2012. வருகிற அக்டோபர் 7 முதல் 28 வரை வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர்கள் பெயரை இச்செவ்வாயன்று அறிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
"கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்புவதற்கான நற்செய்திப்பணியில் புதிய முறைகள்" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு, மும்பை பேராயர் கர்தினால் Oswald GRACIAS, கேரளாவின் C.M.I துறவு சபை அதிபர் அருள்தந்தை Jose PANTHAPLAMTHOTTIYIL உட்பட, கர்தினால்கள் பேராயர்கள், ஆயர்கள் மற்றும் அருள்தந்தையர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கர்தினால்கள் அவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ சொதானோ, ஜெர்மனியின் Cologne பேராயர் கர்தினால் Joachim MEISNER, போஸ்னியா-எர்செகொவினா பேராயர் கர்தினால் Vinko PULJIČ, டான்சானிய நாட்டு Dar-es-Salaam பேராயர் கர்தினால் Polycarp PENGO, வியன்னா பேராயர் கர்தினால் Christoph SCHÖNBORN எனப் பல கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள் இன்னும் உட்பட சில அருள்தந்தையர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.