2012-09-18 15:12:35

அன்னை தெரேசா வாழ்வில் நடந்த பெரிய அற்புதம்


செப்.18,2012. அருளாளர் அன்னை தெரேசா பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபையைத் தொடங்குவதற்கு முன்னர், அவர் சேர்ந்திருந்த லொரேட்டோ துறவு சபையை விட்டு விலகாமல், அதேசமயம் அச்சபையின் குழு வாழ்விலிருந்து மட்டும் விலகி இருப்பதற்கு வத்திக்கானிலிருந்து கிடைத்த அனுமதியே அவர் வாழ்வில் நடந்த உண்மையான புதுமை என்று Naveen Chawla தெரிவித்தார்.
அன்னை தெரேசாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய Naveen Chawla ஓர் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
சுதந்திர இந்தியா பிறந்து சிறிது காலமே ஆகி குழப்பத்தின் மத்தியில் இருந்த சமயம் பாதுகாப்பில்லாமல் இருந்த கொல்கட்டா நகரத்தில் தனியே பணி செய்வதற்கு அன்னை தெரேசா விரும்பினார் என்றும், அவரது விருப்பத்தை வத்திக்கான் நிராகரித்து இருந்திருந்தால் பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபை முளையிலேயே கிள்ளி எறியப்பட்டிருக்கும் என்றும் Chawla தெரிவித்தார்.
1950ம் ஆண்டில் அன்னை தெரேசா ஆரம்பித்த பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபையின் வெற்றி, அது கொல்கட்டாவில் தொடங்கப்பட்டதை அதிகம் சார்ந்துள்ளது என்றும் Chawla தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.