2012-09-17 15:48:13

விலங்குகளின் உணவுப் பற்றாக்குறைக்குத் தீர்வாக தமிழகக் காடுகளில் மரம் நடும் பணி


செப். 17, 2012. விலங்குகளின் உணவுப் பற்றாக்குறையைத் தீர்க்க வனப்பகுதியில் ஒரு ஹெக்டேருக்கு, 100 மரக்கன்றுகள் வீதம் நடவு செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதிலும், 22,877 சதுர கிலோ மீட்டர், வனப்பகுதியாக உள்ளது. வனத்தில் இருந்து, விலங்குகள் வெளியேறுவதைத் தடுக்க, மாநிலம் முழுவதும் தடுப்பணைகள், கசிவுநீர்க் குட்டைகள், தண்ணீர் தொட்டிகளை அமைக்க, அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக வனங்களில் வசிக்கும் விலங்குகள் மற்றும் பறவைகளின் உணவுப் பற்றாக்குறையைப் போக்க, வனப்பகுதியில் மரங்களை நடவு செய்யவும், அரசு தற்போது ஆணைப்பிறப்பித்துள்ளது.
வன விலங்குகளின் உணவுப் பற்றாக்குறையைப் போக்க, வனப்பகுதிக்குள் மரங்களை நடும் திட்டத்தின் கீழ், ஹெக்டேருக்கு, 100 மரக்கன்றுகள் என்ற வீதத்தில், மரக்கன்றுகள் நடப்படவுள்ளதால், வன விலங்குகளின் உணவுச் சங்கிலி மாறாமலும், உணவுப் பற்றாக்குறை ஏற்படாமலும் இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.








All the contents on this site are copyrighted ©.