2012-09-15 15:33:30

கவிதைக் கனவுகள் - நான் யார்..?
கலைவேந்தன் கவிதைகள் என்ற இணையத்தளத்தில் கண்டெடுத்தக் கவிதையிலிருந்து சில வரிகள்...


ஏழை நெசவாளனுக்கு
ஏக புத்திரன் நான்..
வாழத்தெரியாத வம்புக்காரன்..

நேசிக்கத்தெரிந்த எனக்கு
பிறர் மனங்களை
வாசிக்கத்தெரியவில்லை..

கண்ணில் கண்டோர் எல்லாருமே
மண்ணில் நல்லவர் என்றே உணர்ந்தேன்
புண்ணில் தானே பூர்வீகம் புரியும்..?

என்றாவது ஒருநாள்
என்றன் உடல் மாயும்..
அன்றையப் பொழுதேனும்
அறியப்படுவேனா ...?

உலகின் மீது ஒரு சினம் இல்லை
கலகம் என்பது எவரிலும் இல்லை
நானே கலகம் நானே முடிவு..

எத்தனை அமைதி ...
கண்ணில் தெரிகிறது
அத்தனையும் இழந்தேன்
இத்தனை நாளாய்...








All the contents on this site are copyrighted ©.