2012-09-14 17:29:10

இலங்கையில் இரண்டரை ஆண்டுகளுள் 9,412 தற்கொலைகள்! ஆண்களே அதிகம்


செப். 14, 2012. இலங்கையில் பல காரணங்களுக்காகத் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையின்படி, 2010ம் ஆண்டு, 2914 ஆண்களும் 950 பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனவும், இது 2011ல் 2939 ஆண்கள், 831 பெண்கள், 2012ல் ஜுன் மாதம் வரையான காலப்பகுதிக்குள் 1381 ஆண்கள், 397 பெண்கள் என அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனவும், 40 முதல் 55 வயதுக்கு இடைப்பட்டவர்களே அதிகம் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில், இரத்தினபுரி மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டில் 16 வயதிற்கு உட்பட்ட 41 சிறுவர்களும் 77 சிறுமியர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனக்கூறும் காவல்துறையின் அறிக்கை, குடும்பப் பிரச்சினை, காதல், தொழில் பிரச்சனை, மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களால் அதிக தற்கொலைகள் இடம்பெற்றுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.