செப். 14, 2012. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 11ம் தேதியை அனைத்துலக சிறுமிகள் தினமாக அறிவிக்க
இலங்கை தீர்மானித்துள்ளது. இலங்கையின் பெண்கள், சிறுமிகள் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவின்
கோரிக்கைக்கு இணங்க அமைச்சரவை, இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. சமூகப் பாதுகாப்பு,
பெற்றோரின் அரவணைப்பு, சிறுமிகளின் கல்வி, நலவாழ்வு, விளையாட்டு போன்றவைகளை கருத்திற்கொண்டே
இந்த அறிவிப்பிற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் நாள்தோறும் பெண்கள்
மற்றும் சிறுமிகள் பாலியல் உட்பட்ட பல்வேறு விடயங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பில் தெளிவூட்டும் வகையிலேயே அக்டோபர் 11ம் தேதியை சர்வதேச சிறுமிகள் தினமாக
இலங்கை அரசு அறவிக்கவுள்ளது. ஏற்கனவே இந்த அறிவிப்பிற்கு ஐக்கிய நாடுகள் சபை தமது
55 வது மாநாட்டில் அங்கீகாரம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.