ஒவ்வோர் ஆண்டும் 1,50,000 கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்திற்காகக் கொல்லப்படுகின்றனர்
செப்.13,2012. ஒவ்வோர் ஆண்டும் உலகில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கிறிஸ்தவர்கள் தங்கள்
விசுவாசத்திற்காகத் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்படுவதாக அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரக்கணக்கொன்று
கூறுகிறது. உலகின் மூன்றில் இரு பகுதி நாடுகளில், அதாவது 133 நாடுகளில் கிறிஸ்தவர்கள்
துன்புறுத்தல்களை எதிர்நோக்குவதாகக் கூறும் Pew ஆய்வு அமைப்பின் இவ்வறிக்கை, உலகில் பாகுபாட்டுடன்
நடத்தப்படும் நிலைகளுள் 80 விழுக்காடு, கிறிஸ்தவர்களுக்கு எதிராகவேச் செயல்படுத்தப்படுகிறது
எனவும் தெரிவிக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் 1,50,000 கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்திற்காகக்
கொல்லப்படுவதாக உரைக்கும் இப்புள்ளிவிவர அறிக்கை, கடந்த ஆண்டில் தங்கள் விசுவாசத்திற்காகக்
கொல்லப்பட்டவர்கள் குறித்த விவரங்களையும் வழங்கியுள்ளது.